1903 ஜுலை 15: குமாரசாமி - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

1907: தங்கை நாகம்மாள் பிறப்பு.

1908: திண்ணைப் பள்ளியிலும், ஏனாதி நாயனார் வித்தியாவிலும் கல்வி பயின்றார்.

1909: சத்திரிய வித்தியாசாலாவில் சேர்க்கப்பட்டார்.

1914: ஆறாம் வகுப்பு படித்துக் கொண்ருக்கும்போது பள்ளி செல்வத்தை நிறுத்திக்கொண்டார்.

1919: ஏப்ரல் மாதம் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார். இதே ஆண்டில் சத்தியமூர்த்தியை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

1920: ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.

1923: மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.

1927: சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றும் போராட்டம் நடத்தஅண்ணல்காந்திஜிடம்அனுமதிபெற்றார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே நீல் சிலை அகற்றப்பட்டது.

1926: மதுரைக்கு வருகைபுரிந்த சைமன் குழுவை எதிர்த்தார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்.

1936: காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். யுத்த நிதிக்குப் பணம் தரவேண்டாம் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்த்தால் அந்நிய அரசால் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறைக்கு அனுப்பட்டார்.

1941 மே - 31: சிறையிலிரிந்த காமராஜர் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942-45:
ஆகஸ்டு புரட்சியின் காரணமாக சிறைவாசம் அனுபவித்தார்.

1946 மே 16: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தலில் வெற்றிப்பெற்றார்.

1949-1953: இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றார்.

1954 பிப்ரவரி: மலாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலமைச்சர் இராஜாஜி ராஜினாமா செய்தார். நிலைமையை சமாளிக்க சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குக் காமராஜர் போட்டியிட்டு வென்றார்.

1954 ஏப்ரல் - 13: தமிழக முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டிட்டு வென்றார். 1963 வரை முதலமைச்சராக இருந்தார்.

1961: சென்னையில் மாநகராட்சி உருவாக்கிய காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார்.
1963 அக்டோபர் - 2: காமராஜர் திட்டத்தின் படி (K Plan) பதவியை ராஜினாமா செய்தார்.

1964 - 67: அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

1964 மே - 27: பிரதமர் நேரு மறைந்தார். சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர்.

1966 : பிரதமர் சாஸ்திரி மறைந்தபோது இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்குத் துணை செய்தார்.

1966 ஜுலை 22: சோவியத் நாட்டில் இருபது நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

1967: பொதுத் தேர்தலில் காமராஜர் தோல்வியுற்றார். சி.என். அண்ணாதுரை முதல்வரானார்.

1969: நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1975 அக்டோபர் - 2: காமராஜர் மறைந்தார்.

1976: மத்திய அரசு காமராஜர் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. ‘பாரத ரத்னா விருது வழங்கியது.

1977: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காமராஜர் படம் குடுயரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியால் திறந்துவைக்கப்பட்டது.

1978: சென்னை தியாகராய தகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

1984 ஜீலை - 15: விருதுநகரைத் தலைமை இடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டம் உருவாகியது.